சிங்கம்புணரியில் மாவு அரைக்கும் போது மின்சாரம் தாக்கி குடும்பத்தலைவி பலி!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரில் வசிப்பவர் பரமேஸ்வரி (வயது 44).
இவரது கணவர் செல்வம், கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில் ஒரு பெண்ணிற்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது.
இந்நிலையில் பரமேஸ்வரி, குடிசைத் தொழிலாக வீட்டிலேயே முறுக்கு உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வருகிறார். அவர் இன்று காலை வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, முறுக்கு செய்வதற்காக கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மின் இணைப்பை துண்டிக்காத நிலையில் அரைத்த மாவை அள்ளிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரமேஸ்வரி, கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனிருந்த அவரது சிறியமகள் அதிர்ச்சியில் பெருங்குரலெடுத்து அழுது புலம்பிய நிலையில், அக்கம் பக்கத்தார் விரைந்து வந்து பரமேஸ்வரியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அதன் பின்பு தகவலறிந்து தாலுகா தலைமை மருத்துவமனைக்கு வந்த சிங்கம்புணரி காவல்துறையினர் பரமேஸ்வரியின் உறவினர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பரமேஸ்வரியின் சடலம், உடற்கூராய்வுக்காக சிங்கம்புணரி அரசினர் மருத்துவமனை பிணவரையில் வைக்கப்பட்டுள்ளது.
கிரைண்டரில் மாவு அள்ளிக் கொண்டிருந்த குடும்பத்தலைவி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– பாரூக், ராயல் ஹமீது.