டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நெல்லையில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
கோவை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ்குமார் 57 ரன்களையும், முகிலேஷ் 51 ரன்களையும், ரகுமான் 50 ரன்களையும் சேர்த்தனர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நெல்லை அணி இதனால் 15 ஓவர்களில் 101 ரன்களில் நெல்லை அணி ஆல் அவுட்டானது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற கோவை அணிக்கு ரூ.50 லட்சமும், நெல்லை அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.