கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனாலே அதிகமான இளைஞர்கள் மூணார் பகுதிக்கு சுற்றுலா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூணார் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் பலரும் போதைப் பொருட்களை கடத்தி வந்து மூணாறில் வைத்து விற்பனை செய்கிறனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போதை பொருளுக்கு மூணாறில் வசிக்கும் இளைஞர்கள் மட்டுமல்ல அங்கு சுற்றுலா பயணிகளும் அடிமையாகி கொண்டு வருகின்றனர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுற்றுலா வந்த இரண்டு நபர்கள் போதை பொருள் உபயோகித்து டாக்ஸி ஓட்டனர்களிடையே தகராறு செய்த நிலையில் காவல்துறை உடனடியாக பிரச்சனை செய்தவர்களை அழைத்து விசாரிக்க போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது ஆனாலும் எச்சரிக்கை கொடுத்து அனுப்பி உள்ளனர்.
இதை தொடர்ந்து மூணார் சுற்றுலா தளத்தில் பல இடங்களிலும் போதை பொருட்களை உட்கொண்டு இளைஞர்கள் சண்டையிடுவது மக்களோடு பிரச்சினைகள் செய்வது வழக்கமாய் கொண்டு வருகின்றன இது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கேரள அரசு உடனடியாக இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.