திமுக பிரமுகர் லாட்டரி விற்பனை.. தட்டிக்கேட்ட DYFI நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்!!!

சேலம், கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். கருங்கல்பட்டி உள்ளிட்ட சேலத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.

கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் என்பவர் லாட்டரி விற்பனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று பெரியசாமி அதே கருங்கல்பட்டி பகுதியில் பதாகைகள் எழுதி வைத்துள்ளார். மேலும் தேநீர் கடைகள் உள்ளிட்டப் பல இடங்களில் நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதை, செல்போன் மூலம் வீடியோ எடுத்து காவல்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் லாட்டரி விற்பனையை நடத்தி வரும் 55வது வார்டு கவுன்சிலரின் கணவர் சதீஷ், பெரியசாமி மீது ஜூலை 12 அன்று தனது அடியாட்களை ஏவி கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பெரியசாமிக்கு தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரியசாமிக்கு சொந்தமான கனரக வாகனம் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பெரியசாமியை தாக்கியவர்களை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள் மீதும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து படுகாயமடைந்த பெரியசாமியை மீட்டு கருங்கல்பட்டி மக்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதிநிதி பிரபாகரன் கூறுகையில், ”அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சேலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் லாட்டரி விற்பனையாளர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதி அளித்து வருகின்றனர். இதை எதிர்த்து குரல் கொடுத்த எங்கள் மாவட்டச் செயலாளர் மீது பயங்கர ஆயுதங்களால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். லாட்டரி விற்பனையைத் தடுத்து நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் பெரியசாமியின் உறவினர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் குழு) நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தாக்குதல் நடத்திய சதீஷ் உள்ளிட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; சேலம் மாவட்டத்தில் நம்பர் லாட்டரி விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மறியல் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சிறிது நேரம் கலவர பூமியாக காட்சி அளித்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQபோராட்டகத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாவட்டச்செயலாளர் பெரியசாமியின் உறவினர்கள் அனைவரையும் கைது செய்து சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல் துறையினர் அடைத்தனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே லாட்டரி விற்பனையானது கொடிகட்டி பறக்கிறது. இதனை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp