திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி விஜயபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில்
ராஜேஸ்வரி தனது இரு சக்கர வாகனத்தில் மகள் திவ்யதர்ஷினியை அழைத்துக் கொண்டு நல்லிகவுண்டன் நகர் அருகே புதன்கிழமை 5.07.2023 மாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அதே வழிதடத்தில் வந்த காவல் துறை வாகனம் புவனேஸ்வரியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது இந்த விபத்தில் திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புவனேஸ்வரி பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் காவல் துறை வாகனத்தை இயக்கி வந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த சின்னகண்ணன் (வயது 28) என்பவரை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த நல்லூர் காவல் துறையினர் வாகன ஓட்டுநரான சின்னக்கண்ணனை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் காவல் துறை வாகனத்தை இயக்கி வந்த சின்னக்கண்ணன் மதுபோதையில் இருந்துள்ளார் அதே சமயம்
அவர் வேகமாக வாகனத்தை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே சின்னக்கண்ணனைக் கைது செய்வதுடன் சிறுமியின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தாய் கண் முன்னே 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-M.சுரேஷ்குமார்.