நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மீன் பிடித்து மகிழும் இளைஞர்கள்!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள குளங்கள் நிரம்பின. நொய்யல் ஆற்றில் பல மாதங்களாக தண்ணீர் இல்லாமல் ஆறு வறண்டு காணப்பட்டது.

தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நொய்யல் ஆற்றின் சித்திரைசாவடி
தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ராஜவாய்க்கால் வழியாக பாசனத்திற்கு செல்கிறது. இதனால் தொண்டாமுத்தூரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. எனவே தொண்டா முத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆற்றுக்கு வந்து நீரில் குளித்து மகிழ்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒரு சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். இதில் தற்போது பெரிய அளவில் மீன்கள் கிடைத்து வருகின்றன. எனவே பலரும் ஆர்வமிகுதியில் கூட்டம் கூட்டமாக வந்திருந்து போட்டி போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர். தொண்டாமுத்தூரின் கிளை ஆறுகளில் இருந்தும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும் என
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp