கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள தம்பு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவி 14 வயதான ஹேமவர்த்தினி, அவரது தாத்தா 75 வயதான ராமசாமி ஆகியோர் நேற்று முன் தினம் மாலை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அரசு பஸ்ஸில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற மாணவியின் சகோதரி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போக்குவரத்து இணை கமிஷனர் சிவக்குமரன், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன், உள்ளிட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இணை கமிஷனர் சிவக்குமரன் கூறியதாவது: பஸ் வந்த சாலை தாழ்வான எஸ் வளைவுடன் கூடியது. பள்ளி விடும் நேரத்தில் அப்பகுதியில் பேரிகாடு வைப்பதற்கும், போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தவும், பள்ளி குழந்தைகளை சாலை ஓரமாக பாதுகாப்பாக செல்வதற்கு அறிவுறுத்த, பள்ளி சார்பில் பணியாளர்கள் நியமிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனருக்கு அறிக்கை அனுப்பப்படும். இதுபோன்றுவிபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.