பள்ளி கல்வி துறை சார்பாக நடைபெற உள்ள போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐந்து வகை விளையாட்டு போட்டிகளில் 2000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக 27 வது ஆண்டாக மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி சிங்காநல்லூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஆர். நினைவு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளீகள், தனியார் பள்ளிகள் என 70 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 2500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கூடைப்பந்து, கைப்பந்து, கோகோ, கபடி மற்றும் பூப்பந்து என ஐந்து வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 14,17, மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. பள்ளிக்கல்வி துறை சார்பாக நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தயார் செய்யும் நிலையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.