போலியான ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த இ சேவை மைய உரிமையாளர் கைது!!!

கோவை செல்வபுரம் பகுதியில் சினேக ராம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 39 வயதான கார்த்திக் ஆதித்யா, என்பவர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மருத்துவமனையில் ரகுபதி என்பவர் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய உறவினர் பரத் என்பவர் அவருடைய இறப்புச் சான்றிதழில் முகவரியை மாற்றுவதற்காக உரிய ஆவணங்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்,

அந்த ஆவணங்களை பரிசோதித்த போது மருத்துவமனையின் பெயரில் போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு தலைமை மருத்துவரின் கையெழுத்து, மருத்துவமனையில் சீல் ஆகியவை போலியாக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து கார்த்திக் ஆதித்யா அந்த சான்றுகளை கொண்டு வந்த பரத்திடம் விசாரித்தார், அப்போது அவர் இந்த ஆவணங்களை எல்ஐசி காலனி பகுதியில் செயல்பட்டு வரும் இ சேவை மையம் நடத்தி வரும் சத்யராஜ் என்பவர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். தொடர்ந்து இது குறித்து மருத்துவமனை மேனேஜர் கார்த்திக் ஆதித்யா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர், விசாரணையில் ஆவணங்களை போலியாக தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இ சேவை மையம் நடத்தி வரும் அர்ஜுனன் என்பவரின் மகன் 42 வயதான சத்யராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp