மதுபான கூடத்தில் ரகலையில் ஈடுபட்டு பொருட்களை அடித்து நொறுக்கிய கும்பல் கைது !!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் சாலையில் உள்ள மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினார்கள். அப்போது அவர்களுக்கு ஊழியர் பழனியப்பன் என்பவர் சப்ளையராக இருந்தார்.

இந்த நிலையில் அந்த கும்பல் இரவு 10 மணியான பிறகும் அங்கிருந்து புறப்படவில்லை.
எனவே பழனியப்பன் “நீங்கள் கிளம்பினால் வசதியாக இருக்கும், கடையை மூட வேண்டும்” என்று கூறியுள்ளார். இதற்கு அந்த கும்பல் ஒப்புக் கொள்ளவில்லை பழனியப்பனிடம் மேலும் மதுபாட்டில் கேட்டு தகராறு செய்தனர். இதற்கு அவர் மறுத்து விட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே ஆத்திரம் அடைந்த கும்பல் பீர் பாட்டிலால் சரமாரியாக பழனியப்பனை தாக்கினர். இதில் பழனியப்பனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக சக ஊழியர்கள் திரண்டுவந்து நியாயம் கேட்டனர். இதற்கிடையே அந்த கும்பலில் இருந்த ஒருவர் தேவராயபுரத்தை சேர்ந்த சிலருக்கு போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் மேலும் 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து மதுபானகூடத்தில் இருந்த டேபிள், சேரை அடித்து உடைத்து சூறையாடிவிட்டு தப்பி சென்றனர். இதனை தொடர்ந்து பழனியப்பனை சக ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டு உள்ளன.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் நேற்று பழனியப்பன் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் தேவராயபுரத்தை சேர்ந்த நொய்யல் கார்த்திக் என்பவர் தலைமையில் புத்தூர் மதுபான பாருக்கு வந்த கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது, இதனை தொடர்ந்து போலீசார் தேவராயபுரத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் 11 பேர் சிக்கினர். அவர்களிடம் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கண்ட 11 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தேவராயபுரத்தை சேர்ந்த 29 வயதான நொய்யல் கார்த்திக், புதுக்கோட்டை ஆவுடையார்கோவிலை சேர்ந்த 29 வயதான வீரசேகரன், நரசிபுரத்தை சேர்ந்த 27 வயதான பிரகாஷ், தேவராயபுரத்தை சேர்ந்த 19 வயதான மகாவிஷ்ணு என்ற சபரி, 19 வயதான ஹரிஹரன், 22 வயதான பாரதி கண்ணன், 19 வயதான அருணகிரி, 21 வயதான வாஞ்சிநாதன், 21 வயதான சந்தோஷ்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து புத்தூர் மதுபான பாரை சூறையாடி, சப்ளையர் பழனியப்பனின் மண்டையை உடைத்ததாக தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கண்ட 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி 10 பேரை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சீறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp