கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கேரளாவில் முன்னாள் முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் உயர்திரு உம்மன் சாண்டி அவர்கள் தற்பொழுது மரணம் அடைந்துள்ளார்.
அக்டோபர் 1943 – 18 சூலை 2023) இந்திய அரசியல்வாதியும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் 2004 முதல் 2006 வரையும் பின்னர் 2011 முதல் 2016 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றினார். 2006 முதல் 2011 வரை கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் 1970 முதல் 2023 இல் இறக்கும் வரை புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக மிக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் இவர் ஒருவரே ஆவார், அத்துடன் இந்திய மாநில சட்டமன்ற வரலாற்றில் மிக நீண்டகாலம் பதவியில் இருந்தவரும் இவரே ஆவார். ஐக்கிய நாடுகள் அவையினால் பொது சேவைக்காக விருது வழங்கப்பட்ட ஒரேயொரு இந்திய முதலமைச்சரும் இவராவார். 2018 சூன் 6 இல், காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான அனைத்திந்திய காங்கிரசுக் குழுவின் பொதுச் செயலாளராக இவரை நியமித்தார்.
இவரது கடைசிக் காலத்தில் காங்கிரசு காரியக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்.
தனது 79 வது வயதில் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இணுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உம்மன் சாண்டி இறந்தார். கேரளா மாநிலத்தையே கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.