மேலதட்டப்பாறை கிராமத்தில் முளைப்பாரி ஊர்வலம் திருவிழா!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மேலதட்டப்பாறை கிராமத்தில் ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.

மூன்று நாட்கள் திருவிழா நடைபெறுகிறது, இரண்டாம் நாளான நேற்று முளைப்பாரி ஊர்வலம் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தார்கள், பின்னர் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி கும்மி நடனம் நிகழ்ச்சிகள் குழந்தைகள் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரவு அன்னதானம் நிகழ்ச்சி பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்று இரவு 12 மணியளவில் சாமி வேட்டைக்கு செல்லுதல் சாமக்கொடை சிறப்பாக நடைபெற்றது.

மூன்றாவது நாளான இன்று காலையில் சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபடுதல் இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாமன்னன் அகில இந்திய சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் எல் கே முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp