ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இமைகள் கருத்தரங்கம் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, கூடுதல் காவல் கண் காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமை தாங்கி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுதல் மற்றும் இதுதொடர்பான வழக்குகளை விரைவாக முடிப்பது மற்றும் குற்ற வாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டிய நடவடிக் கைகளை எவ்வாறு மேற்கொள்வது உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023 ஆம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை கடந்த 6 மாதங்களில் காவல் துறையினர் மூலமாக நடத்தப்பட்ட சோதனைகளில் கஞ்சா 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து, 64 கிலோ கஞ்சா, 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன மற்றும்
குட்கா கடத்தல் மற்றும் விற்பனை செய்த குற்றங்களில் மொத்தம் 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,421 கிலோ குட்கா மற்றும் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக 216 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாராய வழக்குகளாக மொத்தம் 1,768 வழக்குகள் பதிவு செய்து 1,065 லிட்டர் சாராயம், 3,552 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 199 பேர் கைது செய்யப்பட்டனர். 4 ரவுடிகள், வழிப்பறி, திருட்டு வழக்குகளில் 8 பேர். கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தொடர்பாக 11 பேர், பாலியல் குற்றவாளிகள் 2 பேர், சாராயம் விற்பனையில் ஒருவர் என மொத்தம் 26 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பாக 74 வழக்குகளில் 58 லட்சத்து 25 ஆயிரத்து 20 ரூபாய்
அதன்படி கடந்த 6 மாதங்களில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல் பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைத்தும் குண்டர் சட்டம் மற்றும் நீதிமன்றம் மூலமாக தண்டனை பெற சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் ஆய்வாளர்கள்,
உதவி காவல் ஆய்வாளர்கள் என 14 பேர் மற்றும் தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் 35 பேர் என மொத்தம் 49 பேருக்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி சான்றிதழ்களை வழங்கி கௌரவப்படுத்தப்பட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏஎஸ்பி யாதவ் கிரிஷ் அசோக், டிஎஸ்பிக்கள் பிரபு ராணிப் பேட்டை, ரவிச்சந்திரன் மாவட்ட குற்றப்பிரிவு, சுரேஷ் ஆயுதப்படை உட்பட பலர் பங்கேற்றனர்.
-M.சுரேஷ்குமார்.