வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம்!!
பலத்த காற்றுடன் மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கி பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகள் மற்றும் தடுப்பு சுவர்கள் அங்கங்கே இடிந்து சேதமடைந்து வருகிறது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பலத்த காற்று வீசுவதால் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது சாலையில் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் வாகனத்தை இயக்க வேண்டும் எனவே பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வால்பாறை தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பொதுமக்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டாலோ அல்லது மரங்கள் முறிந்து விழுந்திருந்தாலோ தீயணைப்புத் துறையின் உதவி தேவைப்பட்டால் உடனடியாக எங்களுக்கு போன் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.