வால்பாறையில் பெய்து வரும் கனமழை!! படகு இல்லத்தில் கழிவு நீர் கலப்பதால் பொதுமக்கள் வேதனை!!!

கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை எழில் மிகுந்த ஒரு சுற்றுலாத் தலமாகும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி சார்ந்த வால்பாறையில் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் கொள்ளளவு 90 அடியை எட்டியுள்ளது .

இந்த கனமழையால் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அம்மா படகு இல்லம் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. கனமழையில் நிரம்பி வரும் படகு இல்லத்துக்கு வரும் தண்ணீர் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் இருந்து கழிவு நீர்களுடன் வந்து படகு இல்லத்தின் தண்ணீர் உடன் கலந்து விடுகிறது.

இதனால் படகு இல்லத்தின் தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது மேலும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே வால்பாறை அம்மா படகை இல்லத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் வால்பாறை படகு இல்லத்தில் படகுகள் விடுவதற்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp