விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!! கோவை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை!!!

கோவை மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், உப்புத்தண்ணீர் இணைப்பு எடுப்பது; குழாய் பழுதுக்காக ரோடுகளை தோண்டுவது போன்ற விதிமீறல்கள் அதிகரித்துள்ளன. இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதியில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அதிகரித்துள்ளன.
குடிநீர் இணைப்பு பெற, மாநகராட்சியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். குழாய்கள் மாற்றியமைத்தல் போன்ற பணிகளுக்கு, மாநகராட்சியில் மதிப்பீடு தயார் செய்து, கட்டணம் செலுத்தி, உரிமம் பெற்ற பிளம்பர்கள் வாயிலாக பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட பின், அனுமதியின்றி இணைப்பு வழங்குவது அதிகரித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சமீபகாலமாக, குடிநீர் வினியோக இடைவெளி, 15 நாட்களை தாண்டி விட்டதால், உப்பு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. அதனால், அனுமதி பெறாமல், உப்பு தண்ணீர் குழாய் இணைப்பு எடுக்கப்படுகிறது. இது, மாநகராட்சி கவனத்துக்கு தெரியவந்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து இணைப்பை துண்டிக்கின்றனர்.

ஆறு மாதத்துக்கு முன், 65வது வார்டு, ஒலம்பஸ் அருகே காமராஜர் நகரில், அனுமதியின்றி வழங்கப்பட்டிருந்த ஏழு உப்பு தண்ணீர் குழாய் இணைப்புகளை, அதிகாரிகள் துண்டித்தனர்.
தற்போது, அதே வார்டு, பாரதி நகர் இரண்டாவது வீதியில் ஆளுங்கட்சியினருக்கு ‘கப்பம்’ கட்டி, அனுமதியின்றி உப்பு தண்ணீர் உள்ளிட்ட இணைப்புகள் பெறுவது அதிகரித்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், அனுமதியின்றி ரோட்டை தோண்டி, குழாய் பழுதுபார்ப்பதும் தொடர்கிறது. சிங்காநல்லுார், நந்தா நகரில் குடிநீர் குழாய் பழுது பார்க்க ரோட்டை தோண்டியது, அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. 65வது வார்டு இளநிலை பொறியாளர் மஞ்சுளாதேவியிடம் கேட்டபோது, ”பாரதி நகர் இரண்டாவது வீதியில் உப்பு தண்ணீர் குழாய் பதிக்க, யாருக்கும் அனுமதி தரவில்லை; ஆய்வு செய்கிறேன், ” என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp