தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி தூத்துக்குடி விவிடி சிக்னல் எம்.ஜி.ஆர் பூங்கா எதிரே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக, திமுக அரசை கண்டித்து கோஷங்களில் எழுப்பப்பட்டது. காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் , அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டு, மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்தும் முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடியை பொருத்தமட்டில் அக்காவுக்கும் தம்பிக்கும் அதிகார போட்டிகள் தான் நடைபெறுகிறது மக்கள் நலத்திட்டங்கள் ஒன்றும் திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரவில்லை அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்கள், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் அவர்கள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய காந்தி என்ற காமாட்சி அவர்கள் எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் அவர்கள் ஆவின் தலைவர் தாமோதரன் அவர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.