கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு சூலூர், பட்டணம், உள்ளிட்ட கோவை சுற்றிவட்டார பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகளை தினந்தோறும் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உழவர் சந்தையில் 8 ஆண்டுகளாக காய்கறிகள் விற்பனை செய்து வரும் விவசாயி சுப்பிரமணி என்பவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதை கண்டித்தும், மேலும், உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் விற்பனை செய்வதை கண்டித்தும், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர் சங்கத் தலைவர் ஏ. எஸ் பாபு தலைமையில் உழவர் சந்தையில் இன்று காலை திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி விற்பனை துறை துணை இயக்குனர் பெருமாள், விவசாய சங்கத்தினரை சந்தித்து பேசினார். இதையடுத்து வரும் 15 நாட்களுக்குள் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் உழவர் சந்தையில் வியாபாரம் செய்து வருவது குறித்து விசாரணை மேற்கொண்டு, விவசாயிகள் இல்லாத வியாபாரிகள் உழவர் சந்தையில் இருந்து நீக்கப்படுவார்கள் என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
விவசாயிகள் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைப்பதற்காகவும், பொதுமக்களும் பயனடைய வேண்டியும் உழவர் சந்தை உள்ளது எனவே, வியாபாரிகள் கண்டிப்பாக உழவர் சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டுமென விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். போராட்டத்தின் போது சங்க செயலாளர் ஆர். எம் செல்வராஜ், பொருளாளர் ராஜலிங்கம், அர்ஜுனன், சங்கர், எம் முருகேசன், கவுரி, சுகன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.