வெளியூர் ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்!!

கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறும் தகுதி, தகுதி இல்லாத பயனாளிகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு பயோ மெட்ரிக் கருவிகள் தேவைப்படுகின்றன. இதனால் ரேஷன் கடைகளில் விரல் கைரேகை பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த பயோ மெட்ரிக் கருவிகள் குடிமைப்பொருள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

இதனால் பயோ மெட்ரிக் கருவி இல்லாததால் எந்த முகவரியில் கார்டு உள்ளதோ அங்கு தான் பொருட்களை வாங்க முடியும். இதனால் ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்க முடியாது. வருகிற செப்டம்பர் மாதம் வரை இது நடைமுறையில் இருக்கும். தற்போது ரேஷன் கார்டு எண்ணை எழுதி வைத்து, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, ரசீது வழங்கி பொருட்கள் வினியோகம் செய்யும் பழைய நடைமுறை பின்பற்றப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் வெளியூரில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள், வாடகைக்கு வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்யவில்லை. தற்போது பயோ மெட்ரிக் கருவி திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளதால் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது முகவரி மாற்றம் செய்தாலும், சம்பந்தப்பட்ட கடைக்கு மாறுவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என்கின்றனர். இதனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தற்போது வசிக்கும் பகுதிலேயே பொருட்கள் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp