வைர நகைகளில் சர்வதேச அளவில் பிரபலமான டீ பியர்ஸ் பார் எவர் மார்க் நிறுவனம் கோவை ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியுடன் இணைந்து தனது விற்பனையை துவங்கியது..துவக்க விழாவில் பிரபல திரைப்பட நடிகை பவித்ரா லட்சுமி கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
வைர நகை ஆபரணங்கள் விற்பனையில் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள டீ பியர்ஸ் ஃபார் எவர்மார்க், நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி நகை வர்த்தக நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸுடன் இணைந்து கோவை நூறடி சாலையில் உள்ள விற்பனையகத்தில் தனது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது.இதற்கான துவக்க விழாவில் பிரபல நடிகையும்,. மாடலுமான பவித்ரா லட்சுமி கலந்து கொண்டு புதிய வைர நகைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நகைகளை அணிந்த நடிகை பவித்ரா லட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘டீ பியர்ஸ் பார்எவர் மார்க் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனங்களுடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பார்எவர்மார்க் வைர நகைகள் உள்ளபடியே பிரத்யேகமான அடையாள எண்கள் கொண்டவை, இவை இயற்கையானவை, சிறந்த வைரங்கள் கைகளால் தேர்வு செய்யப்படுபவை. இயற்கை தன்மை கொண்டவை என்பதை நிரூபிப்பவை. இதனாலேயே இவை அழகாகவும், அரியவகை தன்மை கொண்டதாகவும் விளங்குகின்றன. மிகவும் பொறுப்புணர்வுடன் கூடுதல் கவனத்துடன் இத்தகைய ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதை உணர முடிவதாக அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில்,இவ்விரு நிறுவனங்களின் கூட்டணி குறித்து ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்கா, மற்றும் பால் ஜே ஆலுக்கா, ஜான் ஆலுக்கா, ஆகியோர் கூறுகையில், ‘சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டாகத் திகழும் டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவனத்துடனான கூட்டணி குறித்த அறிவிப்பை ஈடு இணையில்லாத மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். டீ பியர்ஸ் நிறுவனத்துக்கும் எங்களுடைய நிறுவனத்துக்குமான கூட்டணியால் எங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் நவீன டிசைன் மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளிலான ஆபரணங்களை வழங்க வழி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இரு நிறுவனங்களின் ஒப்பந்தம் குறித்து டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவனத்தின் துணை தலைவர் அமித் பிரதிஹரி, கூறுகையில்,கோயம்புத்தூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் இப்பகுதியில் வைர நகை வாங்க விரும்புவர்களுக்கு நிறுவனத்தின் இணையில்லா ஆபரணங்கள் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. ஜோஸ் அலுக்காஸின் நவீன வடிவமைப்பில் உருவான ஆபணங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அத்தகைய திறன் மிகு நிறுவனத்துடன்தான் இப்போது கூட்டு சேர்ந்துள்ளோம் என்றார்.
-சீனி, போத்தனூர்.