வேலூர் மாவட்டத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Cell Tracker செயலி மூலம் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 981 புகார்கள் வந்துள்ளன இந்தப் புகார்கள் விசாரணைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் வேலூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெறப்பட்ட 371 புகார்கள் Cell Tracker அறிமுகம்படுத்தபட்ட 15 நாட்களிலேயே துரித நடவடிக்கையின் மூலம் சுமார் ரூ.35,00,000/- மதிப்புடைய 162 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை நேற்று 22.07.2023-ஆம் தேதி வேலூர் சரக காவல்துறை தலைவர் முனைவர் M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன், இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செல்போன்களை பெற்றுக் கொண்டவர்கள் காவல்துறைக்கு நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ரமேஷ், வேலூர்.