தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வேளாண்மை துறை அலுவலகத்தில் அட்மா செயல் விளக்கம் நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் கலந்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் கலந்து கொண்டு இடுபொருட்கள் வழங்கினர். ஓட்டப்பிடாரம் வட்டாரம் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை சார்பில் ஓட்டப்பிடாரம் விவசாயி முத்துவேல் அவர்களுக்கு உளுந்து விதை மற்றும் நுண்ணூட்டம் உரங்கள் திரவ உயிர் உரங்கள் வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் வேளாண்மை துறையில் அட்மா திட்டத்தின் கீழ் கொம்பாடி தளவாய்புரம் விவசாயிக்கு காய்கறி செடிகளுக்கான பாலி எத்திலின் சீட் வழங்கப்பட்டன. அதிகாரிகள் பாலியத்தின் சீட் பற்றி விளக்கம் அளித்தனர். விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலக அதிகாரியை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளளவும்.
இந்த நிகழ்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் அலாய் பெர்னாண்டோ வேளாண்மை அலுவலர் சிவகாமி துணை வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் உதவி வேளாண்மை அலுவலர் பாலகிருஷ்ணன் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் செல்வகுமார் மற்றும் மங்கையர்கரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.