சுதந்திர காற்றை நாம் சுவாசிக்க எண்ணற்றோர் மூச்சுக்காற்றை தியாகம் செய்திருக்கின்றார்கள். அப்படி பெறப்பட்ட சுதந்திரம் பேணிக் காப்போம் சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஆண்டாள் அறக்கட்டளை சார்பாக நகர மன்ற உறுப்பினர் எம் கே சாந்தலிங்கம் அவர்கள் தலைமையில் அவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொள்ளாச்சி மாவட்டத்தின் செயலாளர் ஆட்டுக்கிடாமில் நித்தியானந்தன் அவர்கள் கலந்து கொண்டு போற்றுதலுக்குரிய தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறந்த தூய்மை பணியாற்றியமைக்காக தூய்மை பணியாளர்களுக்கு சால்வை மாலை அணிவித்து நினைவு பரிசை வழங்கினார்.
வட்டத்தின் உடைய செயலாளர் ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவையினுடைய தலைவர் வெள்ளை நடராஜ் அவர்கள் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்கள், மதிமுக நகர செயலாளர் நகர மன்ற உறுப்பினர் துரை பாய் அவர்கள்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் தேவ்ஆனந் அவர்கள் பொருளாளர் அழகு ராஜ்குமார் அவர்கள் நகர தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் திமுகவினுடைய குரு கணேசன் அவர்கள் ரியாஸ் அவர்கள் மாலதி அவர்கள் மார்க்கெட் செல்வராஜ் அவர்கள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கு நன்றி உரை கவர்க்கடை ராஜ் அவர்கள் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.