கேரளா இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு அருகே அமைந்திருக்கும் வாகமண் என்ற சுற்றுலா தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி வழி பாதை பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட உள்ளது. மலைகள் மீது கண்ணாடி பாதை சைனா மலேசியா போன்ற நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை ரசிக்கவும் இதை அனுபவிக்கவும் மேலை நாடுகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் ஆனால் தற்பொழுது இந்தியாவிலேயே முதன்முறையாக மலையின் மீது கண்ணாடி வழி பாதை இடுக்கி மாவட்டம் வாகமன் என்ற சுற்றுலா தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 6 கோடி ரூபாய் செலவில் கேரளா அரசு சுற்றுலா கழகம் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் இணைந்து இதனை வெற்றிகரமாக வேலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து அடுக்கு கண்ணாடிகளை வைத்து அதை செய்யப்பட்டதாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் இனிமேல் வகமனுக்கு சுற்றுலா வரும் பயணிகள் மகிழ்ச்சியோடு அனுபவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மலை உயரத்தில் இருந்து மலை உச்சியில் இருந்து விளையாடும் விளையாட்டுக்கள் தூங்கப்போவதாகவும் கேரளா சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.