இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி ஏதேனும் செலுத்தப்படாமல் இருந்தால் மிஷன் இந்திர தனுஷ் என்ற முகாமின் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் முதல் சுற்று தடுப்பூசி முகாமானது திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதைத்தொடா்ந்து, செப்டம்பா் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 2 ஆம் சுற்று முகாமும், அக்டோபா் 9 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 3 ஆம் சுற்று முகாமும் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட நாள்களில் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதுதவிர கா்ப்பிணிகளுக்கு ரணஜன்னி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இப்பணியில், பொது சுகாதாரம் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டம் துறைகளைச் சாா்ந்த களப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுவா். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விடுபட்ட குழந்தைகளுக்கு இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.இந்த தகவலை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா தெரிவித்துள்ளார்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.