ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் குலசேகரநல்லூர், முறம்பன் , ஒட்டநத்தம் , கல்லத்திகிணறு, மணியாச்சி அருகே சொக்கநாதபுரம், ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

குலசேகரநல்லூர் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 33.80 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது, பின்னர் அந்தப் பகுதியில் ஆழ்துளை குழாய்கள் ஏதும் மூடப்படாமல் இருக்கிறதா என கேட்டு அறிந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் முறம்பன் கிராமத்தில் கிராம ஊராட்சி செயலகம் கட்டப்பட்டு வருகிறது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) மூலம் சுமார் ரூபாய் 46.20 லட்சம் மதிப்பீட்டிலான பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இணைந்து கட்டப்பட்டு வருகிறது, மாவட்ட ஆட்சியர் ஒரு சில மாற்றங்களை மாற்றி அமைக்க ஆலோசனைகள் வழங்கினார்.

மணியாச்சி அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமையலறையை ஆய்வு செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) மூலம் சுமார் ரூபாய் 7.43 லட்சம் மதிப்பீட்டிலான சமையலறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பின்னர் குழந்தைகள் கை கழுவும் தொட்டியை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞான தேவ் , ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சிவராணி, உதவி செயற்பொறியாளர் அமலா , வட்டாட்சியர் பிரபாகரன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் , வட்டாட்சியர் சுரேஷ் , துணை வட்டாட்சியர் ஸ்டாலின்,

வட்ட வழங்கல் அலுவலர் கருப்பசாமி முறம்பன் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுடலைமணி மணியாச்சி பஞ்சாயத்து தலைவர் லதா முருகன் கிராம நிர்வாக அலுவலர் ராஜன் பஞ்சாயத்து செயலாளர் செல்வம் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp