தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை ரோட்டில் அமைந்துள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஜெகதீசன் தலைமையில், முன்னிலை நிர்வாக குழு உறுப்பினர் விஜி , பரமசிவம், மற்றும் பெருமாள் சாமி , ஓட்டப்பிடாரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மத்திய பா.ஜ.க அரசு கடந்த 12ம் தேதி மூன்று சட்டங்களை மறுசீரமைக்கும் மசோதாக்களை லோக்சபாவில் தாக்கல் செய்தது. அனைத்து சட்டத்தின் பெயர்களையும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பிடாரம் நீதிமன்றம் முன்பு ஒட்டப்பிடாரம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தி மொழிகளில் சட்டத்தின் பெயர்களை மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.