தேசிய மாணவர் படையினருக்கான மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோவை மாணவன் தேசிய மாணவர் படையினருக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி ஆண்டுதோறும் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான தேர்வு முகம் நடத்தப்பட்டது. இதில் சென்னையில் நடைபெற்ற இறுதி போட்டியில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஹரிஷ் துப்பாக்கி சுடுதல் குரூப்பிங் பிரிவில் 1.8 சென்டிமீட்டர் இலக்கை நோக்கி சுட்டதில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் புது டெல்லியில் செப்டம்பர் மாதம் நடைபெறும் அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கோவை திரும்பிய மாணவன் ஹரிஷுக்கு பள்ளியின் தாளாளர் ரவி சாம், தலைமை ஆசிரியர் சௌந்தரராஜ், உதவி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் திருக்குமரன், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து மாணவன் ஹரிஷ் கூறுகையில், ஸ்நாப்பிங் மற்றும் குரூப்பிங் ஆகிய இரு பிரிவுகளில் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் மாநில அளவில் நடைபெற்றது. ஸ்நாப்பிங் என்பது ஒரு வினாடிக்குள் ஒரு தோட்டாவை குறிப்பிட்டு இலக்கை நோக்கி செலுத்த வேண்டும். குரூப்பிங் என்பது குறிப்பிட்டு இலக்கை நோக்கி ஐந்து தோட்டங்களை செலுத்துவதாகும். இதில் குரூப்பிங் பிரிவில் 1.8 சென்டிமீட்டர் இலக்கில் துப்பாக்கி சுட்டதில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் இந்த பயிற்சிக்கு எனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். தேசிய மாணவர் படை அலுவலர் திருக்குமரன் அவர்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை சிறந்த முறையில் கற்றுக் கொடுத்துள்ளார். செப்டம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.