ஒழுங்கற்ற சிகை அலங்காரத்துடன் பள்ளி வரும் ஒரு சில மாணவர்களால் சமூக ஆர்வலர்கள் வேதனை!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் ஒரு சில மாணவர்கள் நாகரிகம் என்ற பெயரில் மாணவர்களின் சீருடை அலங்கோலமாக இருப்பதும் மற்றும் மாணவர்களின் முடி திருத்தம் பல வடிவங்களில் அலங்கோலமாகவும் உள்ளது. இதனை காணும் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் வருத்தப்பட்டு மனதுக்குள் புலுங்கி கொண்டிருக்கிறார்கள் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு சுய கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களின் சீருடை என்பது அனைவரும் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும் அதேபோன்று முடி திருத்தம் என்பதும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் ஒரு பள்ளி மாணவனின் தோற்றம் எப்படி இருக்க வேண்டுமோ அதுபோன்று இருக்க வேண்டும் அதை விடுத்து ஒழுங்கற்ற முறையில் சிகை அலங்காரம் செய்து வருவதும் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதை எல்லாம் பார்க்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளி மாணவர்களின் சீருடை, முடி திருத்தம் ஆகியவை கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் இதை அந்தந்த மாணவர் செல்வங்களே உணர்ந்து திருத்திக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் மேலும் பள்ளிகளில் தகுந்த ஆலோசனைகள் வழங்கி ஒரு சில கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

இது தற்பொழுது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. பொதுவாகவே மாணவச்செல்வங்கள் கல்வி கற்கும் போது சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க தொடங்கி விட்டால் அது அவர்களின் வாழ்க்கை முழுவதுமே தொடர்ந்து ஒரு சிறந்த மனிதனாக வாழ வழிவகை செய்யும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp