கோவை மாவட்டம் வடவள்ளி பேருந்து நிலையம் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில் வார சந்தை நடக்கும் வடவள்ளி முதல் இடையர்பாளையம் சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்படும் வடவள்ளி உழவர் சந்தையின் பிரதான நுழைவாயில் எதிரில் சாலையில் சென்ற கார் திடீரென சாலையோரத்தில் இருந்த கடைகளில் புகுந்தது. இதில் காய்கறி வாங்க வந்திருந்த ஒரு மூதாட்டி 2 வடமாநிலத்தவர் களுக்கு காயம் ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் லிங்கனூரை சேர்ந்த 57 வயதான கனிராஜ் என்பது தெரியவந்தது. அவர் தற்போதுதான் கார் ஓட்டிப்பழகுவதும் அதனால் காரைகட்டுப்படுத்த முடியாமல், விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.