காஞ்சிபுரம் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு, 2 லட்சம் லஞ்சம் – 2 பேர் கைது!!

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் உரிமை கோரும் சொத்துக்கள், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள வாரணவாசியில் உள்ளது. இந்த சொத்துக்களை, பத்மாவதியின் உறவினர் போலி ஆவணங்கள் வாயிலாக விற்றதாக கூறப்படுகிறது. இதனால், அவர் விற்பனை செய்த நான்கு பத்திரங்களை ரத்து செய்யக்கோரி, பத்மாவதியின் மருமகன் உலகநாதன் என்பவர், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

இந்நிலையில் பத்திரங்களை ரத்து செய்ய, அங்கு பணியாற்றும் உதவியாளர் நவீன்குமார், 33, என்பவர், உலகநாதனிடம் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத உலகநாதன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் தெரிவித்தார். அவர்களது அறிவுரையின்படி, ‘முதலில் 1 லட்சம் ரூபாய் தருவதாகவும், பத்திரங்கள் ரத்து செய்த பின், பாக்கி பணத்தை தருவதாக’ நவீன்குமாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, ஓரிக்கை பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில், ரசாயனம் தடவிய, 1 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை, நேற்று மதியம் 2:30 மணியளவில், உதவியாளர் நவீன்குமாரிடம், உலகநாதன் கொடுக்க முயன்றார். அப்போது, அலுவலகத்தின் தற்காலிக பணியாளர் சந்தோஷ்பாபுவிடம் பணத்தை கொடுக்க, நவீன்குமார் தெரிவித்தார். இதையடுத்து, சந்தோஷ்பாபுவிடம் 1 லட்சம் ரூபாயை உலகநாதன் கொடுத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பணத்தை பெற்றுக் கொண்டவர், இருசக்கர வாகனத்தில் லஞ்ச பணத்தை வைக்கும்போது, அங்கு மறைந்திருந்த, டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சந்தோஷ்பாபுவை கையும் களவுமாக பிடித்தனர்.அவரிடம் விசாரித்தபோது, நவீன்குமார் இப்பணத்தை வாங்க சொன்னதாக தெரிவித்தார். எனவே, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஓரிக்கையில் செயல்படுகிறது. இங்குள்ள ஊழியர்கள், பொதுமக்களிடம் பேரம் பேசி லஞ்சம் வாங்குவதாக ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. குறிப்பாக, டிசம்பர் 2020ல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி, அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நேற்று அதே அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக இருவர் கைதாகியுள்ளனர்.
-தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp