தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளி மத நல்லிணக்க நாளை முன்னிட்டு மாணவர்கள் ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர் .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் ஜாதி, மதம் ,இனம், மொழி, வட்டாரம் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் மத நல்லிணக்கத்தோடு நடந்து கொள்வேன். வன்முறைக்கு என்றைக்கும் இடம் கொடுக்காமல் பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அகிம்சை முறையில் பாடுபடுவேன் என மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது பள்ளி தாளாளர் வின்சென்ட் மற்றும் தலைமை ஆசிரியர் அன்புநாதன் அவர்கள் ஓட்டப்பிடாரம் உதவி ஆய்வாளர் விஜயகுமார் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.