கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அஜீத் லால் மோகன் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது அவர்,கோவையில் அனைத்து கிளப்புகளையும் இணைத்து விரைவில் கால்பந்து போட்டிகளை நடத்த இருப்பதாகவும், கோவை மாவட்டத்தில் திறமை மிக்க இளம் கால்பந்து வீரர்களை அடையாளம் கண்டு தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தை சிறந்த கால்பந்து விளையாட்டு மையமாக மாற்ற பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும்,கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் எளிய நிலையில் உள்ள திறமையான வீரர்களை மாணவ பருவத்திலேயே அடையாளம் கண்டு, அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான வீரர்களாக உருவாக்கும் முயற்சியைத் தற்போது மாவட்ட கால்பந்து சங்கம் மேற்கொண்டுள்ளது..எதிர் காலத்தில் தேசிய, சர்வதேச கால்பந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகளில் கோவை வீர்ர்கள் நிச்சயம் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.