நாடு முழுவதும் நேற்று 77வது சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானத்தில் காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் போலீசார் அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.பின்னர் தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறை அதிகாரிகள், போலீசார், அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்று வழங்கினார்.
ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி ஆணையர் மு. சிவபாலன் அவர்களுக்கு 2022-23 ஆண்டில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு பாராட்டு நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதற்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக 2023 ஏப்ரல் 21 முதல் மே மாதம் 1ம் தேதி வரை நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரியாக ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி ஆணையர் மு. சிவபாலன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியில் சேர்ந்து 4 மாதத்திற்குள் இரண்டு பாராட்டு சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.