கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதி அருகே அமைந்திருக்கும் பாரத்தோடு என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினருக்கு ஒரு மகள் உள்ளார் அந்த சிறுமி தற்பொழுது எட்டாம் வகுப்பு கஞ்சிகுழி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருவதாக தெரிகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்தபொழுது இந்த மாணவி தன்னுடைய உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த பள்ளியின் ஆசிரியர்கள் கஞ்சிக்குழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில் அப்பாவின் தங்கை கணவர் பல மாதங்களாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.உடனடியாக அவரை கஞ்சிக்குழி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்,