சீருடைப் பணியாளர் தேர்வில் கழிவறையில் அமர்ந்து, காப்பியடித்த எஸ்.ஐ மனைவி! உடந்தையாக இருந்த 2 எஸ்ஐ உள்பட 4 பேர் கைது!

காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வின்போது, வாட்ஸ்அப் மூலம் வினாத்தாளை கணவருக்கு அனுப்பி, கூகுளில் விடை தேடி ‘பிட்’ அடித்த இளம்பெண் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட 2 எஸ்.ஐ-க்கள், ஒரு மருத்துவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், போலீஸ் எஸ்.ஐ-க்கான எழுத்துத் தேர்வு கடந்த 26ஆம் தேதி நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆறு மையங்களில் 5,233 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதினர். இவற்றில் பெண் தேர்வர்களுக்கான மையத்தில், தேர்வெழுதிய வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்ற 23 வயதான இளம்பெண், முறைகேட்டில் ஈடுபட்டு கையும் களவுமாகப் பிடிபட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த லாவண்யா, தேர்வறைக் கண்காணிப்பாளரிடம், ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன். கழிவறைக்குச் செல்ல வேண்டும்’ என்றார். தேர்வின் விதிமுறைப்படி யாரையும் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. ஆனால், லாவண்யா கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னதால், தேர்வறைக் கண்காணிப்பாளர் கழிவறைக்குச் சென்று வர அவரை அனுமதித்தார்.

கழிவறைக்குச் சென்ற லாவண்யா, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆனதாலும், லாவண்யா அமர்ந்திருந்த இடத்தில் அவரின் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் இல்லாததையும் கண்டு, தேர்வறைக் கண்காணிப்பாளர் சந்தேகமடைந்து, இரண்டு பெண் காவலர்களை கழிவறைப் பகுதிக்கு அனுப்பி, லாவண்யாவிடம் சோதனை நடத்த உத்தரவிட்டார். அப்போது, லாவண்யா வினாத்தாளையும், விடைத்தாளையும் மறைத்து வைத்திருந்தைக் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்த செல்போனையும் கைப்பற்றி, அதை சோதித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதில், வினாத்தாளை செல்போனில் போட்டோ எடுத்து, சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவரும் தன் கணவர் சுமனின் வாட்ஸ்அப் எண்ணுக்கு லாவண்யா அனுப்பியிருக்கிறார். சுமன், தனது நண்பர்களான விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் சிவகுமார், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் பிரவின்குமார் ஆகியோருக்கு வினாத்தாளை அனுப்பியிருக்கிறார்.

மூன்று பேரும் சேர்ந்து, கூகுளில் விடைகளைத் தேடி, சரியான பதில்களைக் கண்டுபிடித்து லாவண்யாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு உடனுக்குடன் அனுப்பியிருக்கின்றனர்.
லாவண்யாவும் கழிவறையில் அமர்ந்தபடியே விடைத்தாளில் குறித்துக்கொண்டு வந்தது, விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து, வெறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் லாவண்யா, லாவண்யாவின் கணவரான சப்-இன்ஸ்பெக்டர் சுமன், சுமனின் நண்பர்களான அவலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், மருத்துவர் பிரவின்குமார் ஆகிய நான்கு பேரையும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்திருக்கின்றனர்.
மேலும் இவர்களது இந்த முறைகேடுக்கு சுமனின் சகோதரியான திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா என்பவரும் உதவினாரா என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp