தங்கையை மிரட்டி பாலியல் பலாத்காரம்; உறவுக்கார அண்ணன் போக்சோவில் கைது!

மதுரை அருகே வீட்டில் தனியாக இருந்த தங்கை முறை கொண்ட இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அண்ணன் உறவுமுறை கொண்டவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியை அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவு முறையை கொண்ட காட்டு ராஜா (36) என்பவர் அடிக்கடி வந்து செல்வார். சம்பவத்தன்று இளம் பெண்ணின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த காட்டுராஜா இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.

இந்நிலையில் அதற்கு அந்த இளம் பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாயார் மதுரை அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அந்த இளம்பெண் 11 வார கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளார். அப்போது அண்ணன் உறவுமுறை கொண்ட காட்டுராஜா தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை தாயிடம் கூறி அழுதுள்ளார். மேலும் இதேபோல் பலமுறை மிரட்டி இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து இளம் பெண்னின் தாயார் மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி, இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த காட்டு ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp