தூத்துக்குடியில் தனியார் ஓட்டலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு ஒட்டப்பிடாரம் ஒன்றியத்திலிருந்து பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் மருதன்வாழ்வு பஞ்சாயத்து தலைவர் கந்தசாமிபுரம் ஜம்புலிங்காபுரம் செக்காரக்குடி மற்றும் கோவில்பட்டியில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்து தலைவர்கள் அடங்கிய கூட்டமைப்பு கூட்டம் நேற்று தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கூட்டமைப்பு தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “பஞ்சாயத்து தலைவர்களுக்கு 29 அதிகாரங்கள் உள்ளன. இதை யாருக்கும் அடிபணியாமல் நீங்கள் பணியாற்றலாம். பஞ்சாயத்து தலைவர்கள், தங்களின் தேவைகளை கேட்டு பெறுவதற்கும், குறைகளை சொல்வதற்கும், கலெக்டரை மட்டுமே தொடர்பு கொண்டால் போதும். சென்னையில் வருகிற 31-ஆம் தேதி 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து பஞ்சாயத்து தலைவர்களின் உரிமை மீட்பு பேரணி நடக்கிறது. அதில் அனைவரும் கலந்து கொண்டு நமக்கான உரிமையை வென்றெடுக்க வேண்டும்” என்று கூறினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பஞ்சாயத்து தலைவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், நீர்தேக்க தொட்டி பராமரிப்பாளர்கள் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு பணி நியமனம் வழங்க வேண்டும் அல்லது தலைவர்கள் நியமனம் செய்ய தமிழக அரசு அதிகாரம் வழங்க வேண்டும்.
இந்த கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகள் கோரிக்கைகளை மாநில தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பஞ்சாயத்து தலைவர்கள் யூனியன் அலுவலகத்திற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, இதை கடிதம் மூலம் தெரிவித்தால் போதுமானது என மாவட்ட தலைவர் அறிவுறுத்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.