தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அவர்கள் நேற்று ஆய்வு செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து உட்பட்ட சிலோன் காலனியில் அமைக்கப்பட்டு வரும் சிலோன்காலணி இருந்து குலசேகரன்நல்லூர் வரை இணைக்கும் இந்த சாலை 4. 80 கிலோ மீட்டர் தூரம் வரை பணிகள் நடைபெற்று வருகிறது, தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (TNRRIS) ரூபாய் 62.20 லட்சம் மதிப்பில் 2021-22 நிதியாண்டில் மங்கமா சாலையை நேரில் சென்று ஆய்வு செய்தார், பின்னர் பணிகளை மழைக்காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.
அதன் பின்னர் பாஞ்சாலங்குறிச்சி சென்று அங்கு கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலகத்தை பார்வையிட்டார், இந்த அலுவலமானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) மூலம் ரூபாய் 23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாஞ்சால்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 9.13 லட்சத்தில் கட்டப்பட்டு வருகிறது. பின்னர் முப்புலிவெட்டி கிராமத்தில் சென்று அங்கே கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தை ஆய்வு மேற்கொண்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) மூலம் ரூபாய் 7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் போதும் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி ஆணையர் மு.சிவபாலன் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் பொறியாளர் பிரான்சிஸ்கோ, பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கமலா யோகராஜ் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.