மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தேசம் காப்போம் என்ற தலைப்பில் கோவையில் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி மாவட்டச் செயலாளர் M.H. அப்பாஸ் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் M.H. ஜாஃபர் அலி, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் PMA. பைசல் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆயத்தப் பணிகள் குறித்தும், பொதுக் கூட்டத்திற்கு மக்களை ஒன்று திரட்டுவதை குறித்தும்,அன்று காலை நடைபெறவிருக்கும் MJTS தொழிற்சங்கத்தின் சார்பாக நடைபெறவிருக்கும் போதைக்கு எதிரான பிரச்சார நிகழ்வை குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சிங்கை சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஹனிபா, ஜாஃபர் சாதிக், அன்வர் பாஷா, தொழிற்சங்க செயலாளர் ஜாகீர், பொருளாளர் அன்சர், துணைச் செயலாளர் பாஷா, இளைஞர் அணி செயலாளர் முஜீப் ரஹ்மான், வர்த்தக அணி செயலாளர் பையாஸ், பொருளாளர் சலீம், துணைச் செயலாளர் ஜாகீர், மற்றும் ரியாஸ்,ஷாஜஹான் மற்றும் MJTS வானவில் தொழிற்சங்க நிர்வாகிகள் இப்ராஹிம் ஷா,பீர் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.