
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவையில் YWCA இளம் மகளிர் கிறிஸ்துவ சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் தெரிவித்தனர். மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் YWCA இளம் மகளிர் கிறிஸ்துவ சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் தெரிவிக்கும் நிகழ்ச்சி தலைவர் சர்மிளா பிரின்ஸ் தலைமையில் நடைபெற்றது. உடன் அனிதா வினோத், குமாரி ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
-சீனி, போத்தனூர்.