கோவை மாவட்டம் அருகே எட்டிமடை வாளையாறு ரயில்வே வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடம் வனப்பகுதிக்குள் அமைந்திருப்பதால் அங்கிருக்கும் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது அங்கு வேகமாக வரும் ரயில்களில் அடிபட்டு உயிரிழக்கும் சூழல் இருந்து வந்தது.
இந்த வழித்தடத்தில் அடிக்கடி ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மதுக்கரையில் இருந்து வாளையார் வரை உள்ள ரயில்வே வழித்தடம் வனப் பகுதியில் அமைந்து உள்ளதால் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் யானைகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன என தெரியவந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனைத்தொடர்ந்து ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் 7.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 அடி அகலமும் மற்றும் 20 அடி உயரம் கொண்ட சுரங்கப் பாதை ஒன்று கட்டப்பட்டது. யானையின் நடமாட்டத்தை கண்டு அறிவதற்காக சுரங்கப் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. சுரங்கப் பாதையை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததும் யானைகள் இந்த பகுதியை பயன்படுத்தாமல் இருந்து வந்தது. இதனால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் முதல் முறையாக காட்டு யானை ஒன்று இந்த சுரங்கப் பாதை வழியாக வாளையார் அணைக்கு சென்றது. இது தொடர்பான காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனைக்கண்டு அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி யானைகள் சுரங்கப் பாதையை பயன்படுத்துவதன் மூலம் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்படும் என ரயில்வே துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.