கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட ஐயர்பாடி எஸ்டேட் ஜே இ. பங்களா ஓலப்பாடி அருகில் உள்ள வனப்பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நான்கு தலைமுறையாக ஆறு குடியிருப்பு வீடுகள் இருந்துள்ளது. இங்கு வசித்து வந்த மக்கள் சிவலிங்கம் ஒன்றை வழிபட்டு வந்துள்ளார்கள். வன விலங்குகளின் தொடர் தொந்தரவுகளால் அங்க வசித்து வந்த மக்கள் இனிமேல் இங்கு வாழவே முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் காட்டு மிருகங்களின் அட்டகாசம் அதிகம் இருந்த காரணத்தினால் குடியிருப்பை காலி செய்துள்ள மக்கள் சிவலிங்கத்தை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். அவர்கள் சென்றவுடன் சிவலிங்கத்தை பராமரிக்கவும் வழிபடவும் யாரும் இல்லாத காரணத்தால் கவனிப்பாரற்று கிடந்துள்ளது இதனால் புதர் மண்டி கிடந்துள்ளது.
அவர்கள் குடியிருப்பை காலி செய்து சுமார் 30 வருடத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. அதனால் 30 வருடங்களுக்கு மேலாக சிவலிங்கம் புதர் மண்டி கிடக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.