வால்பாறை முடீஸ் பேருந்து நிறுத்தம் அருகே கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்!!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட மூடிஸ் பகுதி பேருந்து நிலையம் அருகில் ஆற்றுப்பகுதியில் குப்பை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. முடீஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வால்பாறை செல்வதற்கு முடீஸ் பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான் செல்ல வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்படி உள்ள சூழ்நிலையில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தினால் பொதுமக்கள் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள கடைகளின் கழிவுகளை ஆற்றுப்பகுதியில் கொட்டி வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து குப்பைக் கழிவுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். வால்பாறை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோவை மாவட்ட கலெக்டர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp