தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி முன்பு அகில இந்திய விவசாயிகள் தொழில் சங்கம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது இந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த மனுவில் கூறியது, அனைத்து வார்டுகளிலும் சாலை, குடிநீர் , தெரு விளக்கு, வாருகால் வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், தமிழக அரசு அறிவித்துள்ள நகர்ப்புற வேலை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வழங்கவும் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இந்நிகழ்வில் தாலுகா செயலாளர் ஜோதி, தாலுகா தலைவர் ராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் செல்வி, தாலுகா குழு உறுப்பினர் ஜெயவேல்முருகன், மணிகண்டன், உட்பட 150 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-க.ராஜேஷ், விளாத்திகுளம் கிழக்கு.