விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழா மற்றும் முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 266 வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன்,துர்க்கை அம்மன் ஆடி மாத கோவில் கொடை விழா மற்றும் முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் 266,வது நினைவு நாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 23 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன முதலாவதாக நடைபெற்ற நடு மாட்டு வண்டி போட்டியை செண்ட மேளம் முழங்க பொது மக்களின் கர ஓசையுடன் விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பூட்டி நடைபெற்றது இந்த போட்டியை மந்திக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் T.முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். மேலும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் டி.வி, மிக்சி, குத்துவிளக்கு போன்ற பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் அமமுக நகர செயலாளர் S.முத்துராமலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த மாட்டு வண்டி போட்டியை காண சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று சீறிப்பாய்ந்த காளைகளின் மாட்டு வண்டி போட்டியை கண்டு களித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-க.ராஜேஷ், விளாத்திகுளம் கிழக்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp