தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையை கண்டித்தும் மணிப்பூர் அரசு பதவி விலக கோரியும் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா பதவி விலகக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார், கதிரேசன் முன்னாள் மாவட்ட செயலாளர், பெஞ்சமின், பிராங்கிளின், மோட்சம், பிரபாவளவன், சடையாண்டி, ஆகியோர் முன்னிலை வைத்தனர், தொண்டரணி வில்லாளன் ரெஸ்லின் வரவேற்புரையாற்றினார்.
மாவட்டத் துணைச் செயலாளர் மோகன் நன்றியுரையாற்றினார், கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பரமசிவம், விளாத்திகுளம் நகர செயலாளர் அழகு முனியசாமி, கணேசன், மகளிர் அணி சிவனம்மாள், முடியப்பராஜ், சேகர், சங்கர், பெரியசாமி, கதிரேசன், உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ராஜேஸ், விளாத்திகுளம் கிழக்கு.