கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதி இடுக்கி மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக காவல்துறையின் சார்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மூன்று வருடங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களை கணக்கில் வைத்து பார்க்கும் பொழுது இந்த மூன்று வருடங்களில் 60% அதிகமான குற்றங்கள் வெளி மாநில தொழிலாளர்கள் செய்துள்ளதாக பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி சஞ்சய் மற்றும் அவருடைய நண்பர்களுடன் இணைந்து வேறொரு நண்பரை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் 2021 அக்டோபர் பெஞ்சமின் என்ற நபர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மற்றும் 2020 ஆம் ஆண்டு ராஜா காடு பகுதியில் குடும்பத்தில் உள்ள நபர்களை கொலை செய்த சம்பவம் மற்றும் 2022 ஆம் ஆண்டு கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மற்றும் திருட்டு வழக்கு 2022 ஆம் ஆண்டு ராஜகுமாரி பகுதியில் மீன் கடை வியாபாரிடம் 4 லட்சம் ரூபாய் திருட்டு இதுபோன்ற பல கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம், போதை பொருள் விற்பனை போன்ற அனைத்து செயல்களிலும் வட மாநிலத்தவர்கள் அதிகமாக ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குற்றங்கள் அதிகரிப்பதால் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் இடையே பல அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் காவல்துறை ஆங்காங்கே அதிரடியாக நடவடிக்கை எடுத்து கண்காணித்து குற்றங்களை குறைக்க முயற்சி செய்து வருகின்றன இருப்பினும் வெளி மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் குற்றங்களை தடுப்பதிலும் பல சிரமங்கள் ஏற்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.