ஒரு காவல் நிலையத்தில் ஒருவர் பதிவு செய்யும் தகவல் இன்டர்போல் வரை பேசப்படும் என்பதால் காவல் நிலையங்களில் ஆவணங்களை பராமரித்தல் என்பது மிக முக்கியமானது என்று சார் காவல் ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர்களுக்கான பதிவேடுகள் பராமரித்தல் பயிற்சியை தொடங்கி வைத்து டிஐஜி முத்துசாமி அவர்கள் பேசினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை என நான்கு மாவட்டங்களை சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற எஸ்.ஐக்கல் மற்றும் காவல் நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள் பராமரிப்பு பயிற்சி வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி அவர்கள் தலைமையில் நேற்று நடந்தது இப்ப பயிற்சியில் 250 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இந்நிகழ்ச்சியில் எஸ்.பி க்கள் வேலூர் மணிவண்ணன், ராணிப்பேட்டை கிரண்ஸ்ருதி, திருப்பத்தூர் ஆல்பர்ட் ஜான், திருவண்ணாமலை கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி முருகானந்தம் நிலைய பதிவேடுகள் பராமரித்தால் தொடர்பான பயிற்சி அளித்தார்.
இப்ப பயிற்சியில் காவல் நிலையங்களில் அனைத்து ஆவண பதிவேடுகள் முழுமையாக பராமரித்தல் குற்ற பதிவேடுகள் சரியாக பராமரித்தல் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது இப்பயிற்சியின் மூலம் காவல் நிலைய பதிவேடுகள் பராமரிக்கப்படும் நிலையில் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க முடியாது அதோடு குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம் இதன்மூலம் நிலைய எழுத்தர்களுக்கு பணிச்சுமை குறையும் மக்களுக்கும் பயன் அளிக்கும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பயிற்சியை தொடங்கி வைத்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவர்கள் பேசியதாவது;
காவல் நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப் படுவதில்லை. ஒரு குற்றம் நடக்காத நிலையில் குற்றம் நடந்ததாக பதிவு செய்வதும் தவறு குற்றத்தை மறைத்து பதிவு செய்யாததும் தவறுதான் ஒரு காவல் நிலையத்தில் நான் ஆய்வு செய்த போது அங்கு எட்டு தகவல்களை ஒரே பதிவேட்டில் பதிவேற்றம் செய்து இருந்தது அதிர்ச்சி அளித்தது அந்த பதிவேடுகள் தொலைந்தால் மீண்டும் எட்டு தகவல்களும் கிடைக்காது.
காவல் நிலையங்களில் சரிவர பதிவேடுகள் பராமரிக்கப்படாதது மனவேதனையையும் வலியையும் தருகிறது ஒரு காவல் நிலையத்தில் ஒரு காவலரால் பதிவு செய்யப்படும் தகவல் சப் டிவிஷனுக்கு போகும் அங்கிருந்து மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கு செல்லும் அங்கிருந்து மாநில குற்ற ஆவண காப்பகத்திற்கும், தேசிய குற்ற ஆவண காப்பகத்துக்கும் செல்லும் அங்கிருந்து இன்டர்போலுக்கும் செல்லும். தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து தான் நாடாளுமன்றத்திலேயே எம்பிக்கள் காவல்துறை சார்ந்த பிரச்சினைகளை பேசுவர் ஆகவே டேட்டாக்கள் மிக முக்கியம். ஆகவே ஒரு ஸ்டேஷன் லிமிட்டில் அன்றைய தினம் வழிப்பறி நடக்கவில்லை என்றால் அங்கு இல்லை என்றே குறிப்பிட வேண்டும் அதேபோல நடந்ததையும் மறைக்கக்கூடாது பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் இப் பயிற்சியின் மூலம் நல்ல மாற்றம் உங்களுக்கு வரவேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாலையில் நான் வருவேன் உங்களிடம் கேள்விகள் கேட்பேன் சிறப்பாக பதில் அளிப்பவர்களுக்கு பரிசு உண்டு என்றார் மேலும் முக்கியமான பயிற்சி கோப்புகள் பதிவேடுகள் எப்படி பராமரிப்பது என காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது 30 ஆண்டுகளுக்கு பின்னர் கூட குற்றவாளிகள் பற்றி தகவல் தெரியும் எழுத்தர்களின் பணி சுமையும் குறையும். இங்கு அளிக்கப்படும் பயிற்சியின் அடிப்படையை பின்பற்றினால் கோப்புகளை எளிதில் பராமரிப்பது எப்படி என்று தெரியும் இதன் மூலம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் காவல் நிலையங்கள் மேம்பாடு அடையும் என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன்.