தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பாக 6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரவீந்திர ராஜன் தலைமையில் வட்டாரச் செயலாளர் மு.கா இப்ராஹிம் முன்னிலையில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார கல்வி அலுவலகத்தில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் மயில் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆசிரியை ஜோரிஸ் ஜெனரோ நன்றி கூறினார்.
தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும், காலை உணவு திட்டத்தை 6 ,7 ,8 வகுப்பு மாணவர்களுக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம் மேற்கு.